'நெருப்புடா...'வை சுட்ட விக்ரம் பிரபு


நடிகர் ரஜினியின், கபாலி படத்தின், 'நெருப்புடா...' என்ற பாடல் வரியை, நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, தான் தயாரிக்கும் புதிய படத்திற்கு பெயராக சூட்டியுள்ளார்.
கும்கி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு. வெறும் நடிகனாக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் அவர் உயர்ந்துள்ளார். 'பர்ஸ்ட் ஆர்டிஸ்ட்' என்ற பெயரில் புதிய படத் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ள விக்ரம் பிரபு, தன் முதல் படத்திற்கு, நெருப்புடா... என, பெயர் வைத்துள்ளார்.உச்ச நடிகர்களின் முந்தைய படங்களில் இருந்து படத் தலைப்பை சுடுவது வாடிக்கையாக இருக்கும் நிலையில், நெருப்புடா... என்ற வார்த்தையை சுடுவதில் பிரபு முந்திக்கொண்டார். இப்படத்தில் விக்ரம் பிரபு,
நடிகை நிக்கி கல்ராணி, நடிகர்கள் பொன்வண்ணன், 'மொட்டை' ராஜேந்திரன், 'ஆடுகளம்' நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அசோக்குமார் இயக்குனராக அறிமுகமாகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை, 'பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்' நிறுவனமும், 'சந்திரா ஆர்ட்ஸ், சினி இனோவேஷன்ஸ்' ஆகிய நிறுவனங்களும் சேர்ந்து தயாரிக்கின்றன.


EmoticonEmoticon