5 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அரசு முறைப்பயணமாக மொசாம்பிக், தென் ஆப்பிரிக்கா, தான்சானியா மற்றும் கென்யா ஆகிய நான்கு நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.
இந்தப்பயணத்தின் போது மொசாம்பிக் நாட்டுடன் உணவு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பின் தென் ஆப்பிரிக்கா சென்ற மோடி அவர்கள், தீவிரவாதத்தை முற்றிலுமாக களைய வேண்டும், அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் மேக் இன் இந்தியா திட்டத்திற்காக பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பான வணிக பேச்சுவார்த்தையையும் மேற்கொண்டார். மேலும் ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் பழைய தொடர்புகளை நினைவு கூர்ந்தார்.
குடிநீருக்காக 500 மில்லியன் டாலர் அளவில் கடனை தான்சானியாவிற்கு வழங்குவதாக அறிவித்தார்.
ஐந்தாவது நாள் கென்யா சென்ற மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கென்ய அதிபர் உகுரு கென்யாட்டாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் கென்யா - இந்தியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இணையப் பாதுகாப்பு, போதைப்பொருள் மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றில் இரு நாட்களும் இணைந்து செயல்பட ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐந்து நாள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார்.
இந்தப்பயணத்தின் போது மொசாம்பிக் நாட்டுடன் உணவு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பின் தென் ஆப்பிரிக்கா சென்ற மோடி அவர்கள், தீவிரவாதத்தை முற்றிலுமாக களைய வேண்டும், அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் மேக் இன் இந்தியா திட்டத்திற்காக பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பான வணிக பேச்சுவார்த்தையையும் மேற்கொண்டார். மேலும் ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் பழைய தொடர்புகளை நினைவு கூர்ந்தார்.
குடிநீருக்காக 500 மில்லியன் டாலர் அளவில் கடனை தான்சானியாவிற்கு வழங்குவதாக அறிவித்தார்.
ஐந்தாவது நாள் கென்யா சென்ற மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கென்ய அதிபர் உகுரு கென்யாட்டாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் கென்யா - இந்தியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இணையப் பாதுகாப்பு, போதைப்பொருள் மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றில் இரு நாட்களும் இணைந்து செயல்பட ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐந்து நாள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார்.

EmoticonEmoticon