தேனி: அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விபத்து.. உயிர் தப்பிய குழந்தைகள்


தேனி அருகே அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக மாணவ, மாணவிகள் உயிர் தப்பினர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள முத்துகிருஷ்ணபுரம் எனும் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் திடீரென வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்த போது, கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக மாணவ, மாணவிகள் உயிர் தப்பினர்.


EmoticonEmoticon