'டோரா'வாகும் நயன்தாரா


நடிகை நயன்தாரா அடுத்து நடிக்க உள்ள படத்திற்கு, டோரா என, பெயரிட்டுள்ளனர்.
களவாணி, வாகை சூடவா படங்களை இயக்கிய சற்குணம் தயாரிக்கும் புதிய படத்தில், நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திகில், 'காமெடி' கலந்து உருவாகும் அப்படத்திற்கு, டோரா என, பெயரிட்டுள்ளனர். படத்திற்கான தலைப்பை, இசையமைப்பாளர் அனிருத், 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ளார். இப்படத்தை தாஸ் ராமசாமி எழுதி இயக்குகிறார்.
தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, விவேக் சிவா, மெர்வின் சாலமன் ஆகியோர் இணைந்து இசையமைக்கின்றனர். 'கார்ட்டூன்' கதாபாத்திரமான, டோரா பெயர், நயன்தாரா படத்திற்கு சூட்டப்பட்டிருப்பதால், இப்போதே படம் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. நடிகர் ஜீவாவுடன், திருநாள் - நடிகர் கார்த்தியுடன், காஷ்மோரா - நடிகர் விக்ரமுடன், இருமுகன் என, நயன்தாரா நடித்துள்ள படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.


EmoticonEmoticon